தமிழ்
2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கையின் முதல் மொழிபெயர்ப்பு நிறுவனமான JK SWORN TRANSLATION மொழிபெயர்ப்பு துறையில் முன்னோடியாக உள்ள நிறுவனமென்று கூறினால் அது மிகையாகாது.
மொழிபெயர்ப்பு சேவை பெற்றுக்கொள்வதற்கு விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான, தரமான மற்றும் நியாயமான விலையில் சேவைகளை வழங்கும் மொழிபெயர்ப்பு துறையில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக புகழ்பெற்று விளங்குவது எமது JK SWORN TRANSLATION நிறுவனமாகும்.
இலங்கையில் முதன்முறையாக நிறுவப்பட்ட இந்நிறுவனம் தற்போது இலங்கையில் தலைசிறந்த மொழிபெயர்ப்பு சேவை வழங்குநர்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இந்நிறுவனமானது இரண்டு தசாப்தங்களாக உலகளவில் தனது வாடிக்கையாளர்களுக்கு மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்யும் முறைமையானது சிங்கள / தமிழ் / ஆங்கிலம் உட்பட்ட உள்நாட்டு மொழிகளிலும் மற்றும் பிற சர்வதேச மொழிகளிலும் உயர் நம்பகத்தன்மையுடனும் மற்றும் விரைவாகவும் செய்யப்படுகின்றது.
சட்டரீதியான ஆவணங்கள், நிதி, வணிகம், சந்தைப்படுத்தல், விளம்பரங்கள், மருத்தவம், சுகாதார சேவை, சுற்றுலா, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, கல்வியியல் மற்றும் இலக்கியம், படைப்புக்கள், தொழில் ரீதியான பிணக்குகள், ஒப்பந்தங்கள், பிணைப்புகள், பணியாளர் கையேடுகள் போன்ற பல்வேறு வகையான உள்ளடக்கங்களும், மற்றும் சந்தைப்படுத்தல் பொருட்கள் போன்ற அனைத்து துறைகளிலும் மொழிபெயர்ப்பு செய்யும் வசதியானது இந்த நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் முன்னணி சேவைகளில் ஒன்றாகும்.
போட்டித்தன்மையுடைய பிற மாற்று மொழிபெயர்ப்பாளர்கள் போலல்லாமல் JK SWORN TRANSLATION தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் தரத்திற்கேற்ப உயர் தரமான மொழிபெயர்ப்பு சேவையை வழங்குவதன் பொருட்டு உலக தரம் வாய்ந்த மற்றும் அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களுடன் கைக்கோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எங்களுடைய சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்களால்
சான்றளிக்கப்படுகின்ற ஆவணங்களின் வகைகள் பின்வருமாறு:
மொழிபெயர்பு சேவைகள் பெற்றுக்கொள்ளக் கூடிய - தேசிய மற்றும் சர்வதேச மொழிகள்
உங்கள் ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டிய தேவை ஏற்படின் ஆன்லைன் மூலமாகவும் கூரியர் சேவைகள் மூலமாகவும்; எங்களால் பூர்த்தி செய்ய முடியும். உங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்து எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்களுக்கு உடனடியாக பதிலளிப்போம். எங்கள் வங்கிக் கணக்கில் பணப் பரிமாற்றத்தை மேற்கொண்டப் பின்னர் கூரியர் சேவை மூலம் ஆவணங்கள் உங்கள் வீட்டு வாசலுக்கு கொண்டு வந்து தரப்படும்.